தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 77 வது குடியரசு தின விழா.
ஜனவரி 26 ஆம் தேதி, திங்கள் காலை அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள TUJ தலைமை அலுவலகத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்த நிகழ்விற்கு, மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் தலைமையில்,LION.Dr.LTR. இளைய கட்டபொம்மன் DCE .BA .LLB அவர்கள் ( வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சம் மற்றும்தேசிய குழு உறுப்பினர், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம், புது தில்லி ) முன்னிலையில், தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
எழுத்துச் செல்வர் கலைமாமணி, முனைவர் திரு. லேனா தமிழ்வாணன் எம்.,ஏ., டி.,லிட்., அவர்கள் ( எழுத்தாளர், பதிப்பாளர், சிறப்பாசிரியர், பத்திரிகையாளர் குரல்).
அதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டின் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரை வழங்கினார்,திரைப்பட எழுத்தாளர், இயக்குநர், நடிகர், முனைவர் யார் கண்ணன் அவர்கள் ( துணைத் தலைவர், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்).
மேலும் இந்நிகழ்வில் அரக்கோணம் கவிஞர் மு. இஸ்மாயில், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் கலைமாமணி வி. பிரபாகர், ஆன்மீக புரட்சியாளர் வடபாதி ஆதீனம், வழக்கறிஞர் திருமதி கௌரி அசோகன் (முன்னாள் தமிழக அரசின் மகளீர் ஆணையத்தின் தலைவர் )
மத்திய அரசின் தனிகைக் குழு உறுப்பினர் விருகை வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!
சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்வின் துவக்கத்தில் சமாதான புறா பறக்க விடப்பட்டது
