March 14, 2026

admin

உறுப்பு தானத்தில் ஒரு புதிய உலக சாதனையை செய்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை!

சென்னை, ஆகஸ்ட்  2025: 2016 ஆம் ஆண்டில், ஒரே நாளில்அதிக எண்ணிக்கையிலானோர் உறுப்பு தானம் செய்யமுன்வந்ததற்கான கின்னஸ் உலக சாதனையை படைத்ததுதமிழகத்தின் கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னணிமருத்துவமனைகளில் ஒன்றான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை.  எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை–யால் நடத்தப்படும் இந்தபல்நோக்கு மருத்துவமனை, தற்போது உறுப்பு தானம் சம்மந்தமானமற்றுமொரு சிறப்பான சாதனையை செய்து உறுப்புதானத்தில்உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெறும் மூன்று மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான உறுப்புதான உறுதிமொழிகளைப் பெற்றதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணாமருத்துவமனை ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. 2025பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 45,861 பேரிடமிருந்துஉறுப்புதான உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. இந்த முயற்சிக்கு  வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் (World Records Union) அமைப்புஅதிகாரப்பூர்வ சான்றளித்துள்ளது. இந்த சாதனைக்கான சான்றிதழ், ஆகஸ்ட் 8, 2025,வெள்ளிக்கிழமை அன்று சென்னை ITC கிராண்ட் சோழாஹோட்டலில் நடைபெற்ற சிறப்பு விழாவில் மருத்துவமனைநிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியனின்பிரதிநிதிகளான திருமதி. ஆலிஸ் ரேனாட் மற்றும் சாதனைஅதிகாரி திருமதி. ஷரீஃபா ஹனீஃப் ஆகியோர், எஸ்.என்.ஆர். சன்ஸ்அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. R. சுந்தர்அவர்களிடம் உலக சாதனைச்  சான்றிதழை வழங்கினர். இந்நிகழ்வில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு அரசின் உறுப்புப் மாற்று அறுவைசிகிச்சை ஆணையத்தின் செயலர் திரு. N. கோபாலகிருஷ்ணன்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.அவர்கள் முன்னிலையில் இச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுகுறித்து, உறுப்பு தானத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.S. பிரகதீஸ்வரன் அவர்கள் பேசுகையில், உறுப்பு தானம்தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கொடையாளர்படிவங்கள் வழங்கும் பணிகள் 2024 டிசம்பரில் தொடங்கப்பட்டதுஎன கூறினார். இந்த பிரச்சாரம் என்பது உறுப்புப் மாற்று அறுவை சிகிச்சைஆணையத்தின் (TRANSTAN) ஆதரவுடனும் தேசிய உறுப்பு மற்றும்திசு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு (NOTTO) ஆகியவற்றுடன்இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியின் விளைவு என்றும்குறிப்பிட்டார்.  இந்தப் பரப்புரை மூலம் இந்தியாவிலும்உலகெங்கிலும் உள்ள ஆர்வமுள்ள தனிநபர்கள் தாமாக முன்வந்துஉறுப்பு தானம் செய்ய வழிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டதுஎன்றார். தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:  இதற்கான விழிப்புணர்வை திறம்பட ஏற்படுத்தும் வகையில் ஒருவிரிவான யுக்தி செயல்படுத்தப்பட்டது. ஒரு அர்ப்பணிப்புள்ள குழு, தெரு நாடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், மக்களிடத்தில் சிறப்புரைகள் வழங்குதல் உள்ளிட்ட பலவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்தியது. அதேநேரத்தில், இதை அதிகப்படியான மக்களை வேகமாக சேர்த்திடசமூக ஊடகங்கள் வழியாக ஒரு வலுவான டிஜிட்டல் பிரச்சாரம்மேற்கொள்ளப்பட்டது. உறுதிமொழி அளிக்கும் செயல்முறையை எளிதாக்க, ஒரு பிரத்யேகஆன்லைன் இணைப்பு மற்றும் QR குறியீடுகள் உருவாக்கப்பட்டன.இவை சமூக ஊடகங்கள், சுவரொட்டிகள் மற்றும் முக்கிய பிரச்சாரஇடங்களில் பதாகைகள் மூலம் பரவலாகப் பகிரப்பட்டன. இதுஎளிதான டிஜிட்டல் பதிவுக்கு வழிவகுத்தது. ஆன்லைனில்அல்லாமல் நேரடியாகப் பதிவுசெய்ய விரும்புவோருக்குமருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுநிகழ்வுகளில் நேரடியாக பதிவு படிவங்கள் வழங்கப்பட்டன....